sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆகாய தாமரையால் ஆற்று நீர் மாசுபடும் அபாயம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை

/

ஆகாய தாமரையால் ஆற்று நீர் மாசுபடும் அபாயம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை

ஆகாய தாமரையால் ஆற்று நீர் மாசுபடும் அபாயம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை

ஆகாய தாமரையால் ஆற்று நீர் மாசுபடும் அபாயம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை


ADDED : பிப் 04, 2024 02:19 AM

Google News

ADDED : பிப் 04, 2024 02:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;முதுமலை மாயாறு ஆற்றில், ஆகாயத்தாமரை செடிகள் அதிகரிக்க துவங்கியுள்ளதால், ஆற்று நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம். முதுமலை புலிகள் காப்பகம் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான்கள், காட்டெருமை உள்ளிட்ட வன உயிரினங்களில் முக்கிய வாழ்விடமாகும்.

இவைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், இவ்வழியாக செல்லும் மாயாறு ஆறு, முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

குறிப்பாக கோடை கால வறட்சியின் போது வனவிலங்குகள் குடிநீர் தேவைக்கு இந்த ஆற்றை மட்டும் நம்பியுள்ளன.

மேலும், வளர்ப்பு யானைகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், குளிக்கவும் இந்த ஆற்றுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. அப்பகுதியில் வசிக்கும் பழங்குடி கிராம மக்கள் இந்த ஆற்றுநீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தெப்பக்காடு பகுதியில், மாயாறு ஆற்றில் ஆகாய தாமரை வளர துவங்கி உள்ளது. இதனால், ஆற்று நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,'ஆகாய தாமரைக்கு நீரை ஆவியாக்கும் தன்மை உண்டு. தண்ணீரில் மிதக்கும் இந்த தாவரம் வேகமாக பரவுகிறது. இவை மாயார் ஆற்றில் வளர துவங்கி இருப்பதால், ஆற்று நீர் மாசுபடுவதுடன், இதனை நம்பியுள்ள வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், மீண்டும் இவைகள் வளராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us