/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியினர் பள்ளியில் சமத்துவ பொங்கல்
/
பழங்குடியினர் பள்ளியில் சமத்துவ பொங்கல்
ADDED : ஜன 12, 2025 11:00 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா அரசு பழங்குடியினர் உயர்நிலை பள்ளியில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
ஆசிரியர் முருகன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் தலைமை வகித்தார்.
சமூக ஆர்வலர் காளிமுத்து, கூடலுார் அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் மகேஸ்வரன், மனவளக்கலை மன்ற தலைவர் ஹரிஹரன், கவுன்சிலர்கள் செல்வராணி, சூரிய கலா ஆகியோர், சமத்துவ பொங்கல் கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மாணவர்களின் சிலம்பம் உட்பட தற்காப்பு கலை பயிற்சிகள்; சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவியருக்கு கோலா போட்டி மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் சுஜாதா உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் தவ முரளி நன்றி கூறினார்.