தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நீலகிரியில் நிரம்பிய அணைகளில் உபரிநீர் வெளியேற்றம்

நீலகிரியில் நிரம்பிய அணைகளில் உபரிநீர் வெளியேற்றம்

நீலகிரியில் நிரம்பிய அணைகளில் உபரிநீர் வெளியேற்றம்


ADDED : ஜூலை 29, 2025 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி; நீலகிரி மாவட்டம், ஊட்டி, குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நீரோடைகளில் வழக்கத்தை விட நீர் வரத்து அதிகரித்துள்ளது. குந்தா, பைக்காரா நீர் மின் வட்டத்திற்கு உட்பட்ட நீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும், 13 அணைகளில், 30க்கு மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பியுள்ளன.

உபரி நீர் வெளியேற்றம் அப்பர்பவானி, 210 அடி; குந்தா, 89 அடி; அவலாஞ்சி, 171 அடி; பைக்காரா, 100 அடி; முக்கூர்த்தி, 18 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதில், அவலாஞ்சியில், இரண்டு மதகுகளில் வினாடிக்கு, தலா, 400 கன அடி; குந்தா அணையில், இரண்டு மதகுகளில், வினாடிக்கு, 250 கன அடி; முக்கூர்த்தி அணையில் வினாடிக்கு, 200 கன அடி; பைக்காரவில், மூன்று மதகுகளில், 300 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பிற அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது.

மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'பரவலாக பெய்து வரும் மழைக்கு குந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி, பில்லுார் உள்ளிட்ட அணைகள் இரண்டாவது நாளாக திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று (நேற்று) கிளன்மார்கன், பைக்காரா, மூக்கூர்த்தி அணைகள் திறக்கப்பட்டுள்ளது.தேவைக்கேற்ப நீர் இருப்பில் இருப்பதால் தடையின்றி மின் உற்பத்தி நடந்து வருகிறது,'என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us