sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை; விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

/

தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை; விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை; விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை; விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்


ADDED : மார் 28, 2025 09:07 PM

Google News

ADDED : மார் 28, 2025 09:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; 'தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்,'என, சிறு, குறு செய்தி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி மாவட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சுப்ரமணியன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

தேயிலைக்கு கட்டுபடியாகும் குறைந்த பட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு, 40 ரூபாய் வழங்க வேண்டும்; குறிப்பாக கூட்டுறவு தேயிலை விவசாயிகளுக்கு தற்போதைய விலை கிலோ ஒன்றுக்கு, 20 ரூபாய்க்கு கீழ் வழங்கப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, தேயிலை வாரியம் அறிவிக்கும் மாதாந்திர விலைக்கு குறையாமல். கூட்டுறவு தேயிலை விவசாயிகளுக்கு வழங்க 'இன்கோ சர்வ்' மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அக்., மாதத்திற்கான நிலுவைத் தொகை, 1.40 கோடி ரூபாயை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் , 'இன்கோசர்வ்' நிறுவனம் சீராக இயங்க அதற்கு நிரந்தர நிர்வாக இயக்குனர் நியமிக்க வேண்டும். தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய, மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us