/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்; கோரிக்கைகளை அனுப்பலாம்
/
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்; கோரிக்கைகளை அனுப்பலாம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்; கோரிக்கைகளை அனுப்பலாம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்; கோரிக்கைகளை அனுப்பலாம்
ADDED : நவ 01, 2024 09:52 PM
ஊட்டி ; ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் வரும், 15-ம் தேதி காலை, 11:00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது.
நீலகிரியில் உள்ள விவசாயிகள், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், அந்த கோரிக்கைகளை வரும், 4ம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர், தபால்பெட்டி எண்.72, ஊட்டி -1, அலுவலக முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்கலாம்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் இந்த மாவட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்வதால், விவசாயிகள் விவசாயம் சம்பந்தமான குறைகள் இருப்பின், இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து பயன்படலாம் என தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

