/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் இரவில் கதவுகளை உடைக்கும் கரடியால் அச்சம்
/
குன்னுாரில் இரவில் கதவுகளை உடைக்கும் கரடியால் அச்சம்
குன்னுாரில் இரவில் கதவுகளை உடைக்கும் கரடியால் அச்சம்
குன்னுாரில் இரவில் கதவுகளை உடைக்கும் கரடியால் அச்சம்
ADDED : நவ 07, 2024 08:08 PM
குன்னுார்; குன்னுாரில் இரவு நேரங்களில் கதவை உடைக்கும் கரடியால் குயில்ஹில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குன்னுார் டைகர்ஹில், சி.எம்.எஸ்., குயில்ஹில் உட்பட பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்பகுதிக்கு கடந்த சில நாட்களாக உணவு தேடி இரவு நேரங்களில் வரும் கரடி கதவுகளை உடைத்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை வந்த கரடி அங்குள்ள பங்களா ஒன்றின் கதவை உடைத்தது. உணவு பொருட்கள் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது. டைகர்ஹில் பகுதியில் கூண்டு வைத்த நிலையில் அங்கு கூண்டுக்குள் சிக்காமல் மாற்று இடத்துக்கு சென்றுள்ளது. இதேபோல, காட்டேரி பகுதிகளிலும் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து கதவுகளை கரடி ஒன்று உடைத்து செல்கிறது.
வனத்துறையினர் கூறுகயைில்,'இப்பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக செல்ல வேண்டாம்; கரடி வரும் போது, வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்,' என்றனர்.
மக்கள் கூறுகையில்,'இங்கு அடிக்கடி வரும் கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர்.