sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 சேரம்பாடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையால் அச்சம்

/

 சேரம்பாடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையால் அச்சம்

 சேரம்பாடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையால் அச்சம்

 சேரம்பாடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையால் அச்சம்


ADDED : டிச 17, 2025 06:42 AM

Google News

ADDED : டிச 17, 2025 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: பந்தலுார் அருகே சேரம்பாடி குடியிருப்பு பகுதியில், உலா வரும் சிறுத்தையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பந்தலுார் சுற்றி வட்டார பகுதிகளில், சிறுத்தைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது, சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், சேலக்குன்னா குடியிருப்புகளுக்கு அருகே மரத்தில் சிறுத்தை முகாமிட்டது. அதேபோல் படைச்சேரி என்ற இடத்தில் வீட்டு வளாகத்திற்குள் வந்த சிறுத்தை கோழியை கவ்வி சென்றது.

இந்நிலையில், இரவு சேரம்பாடி லெனின் நகர் பகுதியில் பழனி என்பவரது வீட்டை சுற்றி பல மணி நேரம், சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது.

அதேபோல், காலையில், சேரங்கோடு அருகே படைச்சேரி சாலையில் காட்டெருமை ஒன்று வந்துள்ளது.

இதனை அறியாமல் வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதற்காக சாலைக்கு வந்த மூதாட்டி ஒருவர் ஓடி உயிர் தப்பினார். எனவே, இப்பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.






      Dinamalar
      Follow us