ADDED : நவ 17, 2024 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; நெல்லியாளம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அறிவழகன், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சிவராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், தடை செய்யப்பட்ட புகையிலை; போதை பொருட்கள் குறித்து சோதனையிடப்பட்டது.
மேலும், கடைகளில் பிளாஸ்டிக் விற்பனைக்கு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில்,'மாணவர்கள் கடைகளுக்கு வந்து புகையிலை, பீடி, சிகரெட் போன்ற பொருட்களை கேட்டால், விற்பனை செய்ய கூடாது; தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் விற்பனை செய்ய கூடாது. இவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகள் குறித்து புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.