/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நடைபாதை ஆக்கிரமிப்பு மறியலால் பரபரப்பு
/
நடைபாதை ஆக்கிரமிப்பு மறியலால் பரபரப்பு
ADDED : மார் 10, 2026 06:08 AM

ஊட்டி: ஊட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நடைபாதையை தனி நபர் ஒருவர் அடைத்துள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட,.7வது வார்டு பகுதியான ரோஸ்மவுண்ட் பகுதியில் சுமார், 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இவர்கள் அன்றாட தேவைகளுக்கும் நகராட்சி பொது வழி பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தனிநபர் ஒருவர் தனக்கு சொந்தமான இடம் என்று கூறி பொது வழியை அடைத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நேற்று, 7வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தலைமையில் அப்பகுதி மக்கள் பொதுவழி பாதையை அடைத்ததற்கு கண்டனம் தெரிவித்து, அப்பகுதி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு ஏற்படுத்துவதாக உறுதியளித்ததை அடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.

