sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பட்டாசு இல்லாத புத்தாண்டு வனத்துறையினர் அழைப்பு

/

பட்டாசு இல்லாத புத்தாண்டு வனத்துறையினர் அழைப்பு

பட்டாசு இல்லாத புத்தாண்டு வனத்துறையினர் அழைப்பு

பட்டாசு இல்லாத புத்தாண்டு வனத்துறையினர் அழைப்பு


ADDED : டிச 31, 2024 07:50 AM

Google News

ADDED : டிச 31, 2024 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : முதுமலை, மசினகுடி பகுதியில் பட்டாசு இல்லாத பசுமை புத்தாண்டை கொண்டாட வனத்துறையினர் அழைப்பு விடுத்தனர்.

முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வெளி வட்டம் பகுதியில் குடியிருப்புகள், தனியார் விடுதிகள் உள்ளன. புத்தாண்டு தினத்தில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சப்தம், மாசு காரணமாக, வனச் சூழலுக்கும், வன உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இதனால், பட்டாசு இல்லாத புத்தாண்டை கொண்டாட வனத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக, சிங்கார வனச்சரகர் தனபால் தலைமையில் வன ஊழியர்கள் கிராமங்கள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு, துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதி வனம் மற்றும் வனவிலங்கு சார்ந்து வாழும் பகுதியாகும். புத்தாண்டு தினத்தில் பட்டாசு சப்தம் ஏற்படும்போது வன சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

இதனால், பட்டாசு இல்லாத புத்தாண்டை கொண்டாட அறிவுறுத்தி, கிராமங்கள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us