/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மசினகுடியில் செந்நாய் இறப்பு குறித்து வனத்துறை விசாரணை
/
மசினகுடியில் செந்நாய் இறப்பு குறித்து வனத்துறை விசாரணை
மசினகுடியில் செந்நாய் இறப்பு குறித்து வனத்துறை விசாரணை
மசினகுடியில் செந்நாய் இறப்பு குறித்து வனத்துறை விசாரணை
ADDED : ஜன 06, 2025 12:54 AM

கூடலுார்; முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக்கோட்டம், சிங்கார வனச்சரகத்திற்கு உட்பட்ட பொக்காப்புரம் பகுதியில் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். விபூதிமலை அருகே நீரோடை பகுதியில் ஆண் செந்நாய் இறந்து கிடந்தது தெரிய வந்தது. வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் தனபால், வனவர்கள் சங்கர், மோகன்ராஜ் மற்றும் வன ஊழியர்கள் ஆய்வு செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ் பிரேத பரிசோதனை செய்தார். செந்நாய் இறப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த செந்நாய்க்கு, 6 வயது இருக்கும். இறப்புக்கான காரணம் தெரியாது நிலையில், உடல் மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. ஆய்வு முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

