sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி: வனத்துறை தீவிரம்

/

தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி: வனத்துறை தீவிரம்

தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி: வனத்துறை தீவிரம்

தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி: வனத்துறை தீவிரம்


ADDED : ஜன 14, 2025 01:36 AM

Google News

ADDED : ஜன 14, 2025 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:

கூடலுார் வன கோட்டத்தில் கோடையில் வனத்தீ ஏற்படுவதை தடுக்க, 610 கி.மீ., துாரம் வரை தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கூடலுார் பகுதியில் கடந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட பருவமழை அதிகம் பெய்தது. இதனால், பருவ மழைக்கு பின்பும், வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இரவு மற்றும் அதிகாலை நேரத்தில், பனிப்பொழிவின் தாக்கமும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த காலநிலை மாற்றத்தால், தாவரங்கள், புற்கள் கருகி வனத்தீ அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், 610 கி.மீ., துாரம் வரை தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்ட பகுதியில் அகற்றப்பட்ட செடிகள் காய்ந்து, தீ ஏற்படும் ஆபத்து உள்ளதால், அப்பகுதியில் செயற்கை தீ ஏற்படுத்தி, தீ தடுப்பு கோடுகள் அமைத்து வருகின்றனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் கோடையில், வனத்தீ ஏற்படுவதை தடுக்க கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றோம். மேலும், நபார்டு, தீ தடுப்பு மேலாண்மை திட்டம், யானைகள் பாதுகாப்பு திட்ட நிதி மூலம், 610 கி.மீ., அளவுக்கு, தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. கோடைகாலத்தில் வனத்தீ ஏற்படுவதை தடுக்க, பொதுமக்களும் வனத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

வனத் தீ ஏற்பட்டால், அது தொடர்பான தகவல்களையும், அதுக்கு காரணமானவர்கள் குறித்த விவரத்தையும் வனத்துறைக்கு தெரிவித்து தீயை கட்டுப்படுத்த, ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us