/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண் யானை இறப்பு வனத்துறை விசாரணை
/
பெண் யானை இறப்பு வனத்துறை விசாரணை
ADDED : ஏப் 27, 2025 09:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி : கோத்தகிரி அருகே, பெண் யானை இறப்பு குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி வன கோட்டம், கீழ் கோத்தகிரி வனச்சரகம், கூட்டாடா தனியார் எஸ்டேட், குஞ்சாரா டிவிஷன் பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது.
எஸ்டேட் நிர்வாகம், தெரிவித்த தகவலை அடுத்து, சோலுார் மட்டம் ரேஞ்சர் ராம் பிரகாஷ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார், கக்குச்சி கால்நடை மருத்துவர் ரேவதி ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர்.
பிறகு, இறந்த யானை அதே இடத்தில் புதைக்கப்பட்டது. வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

