sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காட்டு யானை தாக்கி வனத்துறை ஜீப் சேதம்

/

காட்டு யானை தாக்கி வனத்துறை ஜீப் சேதம்

காட்டு யானை தாக்கி வனத்துறை ஜீப் சேதம்

காட்டு யானை தாக்கி வனத்துறை ஜீப் சேதம்


ADDED : ஆக 11, 2025 08:38 PM

Google News

ADDED : ஆக 11, 2025 08:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அகளி புளியப்பதியில் உள்ள தனியார் தோப்பில், காட்டு யானை உள்ளதாக வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.

ஷோலையூர் சரக அதிகாரி வினோத் தலைமையிலான, ஏழு பேர் கொண்ட வனத்துறையினர், அப்பகுதிக்கு ஜீப்பில் சென்றனர். தோப்பினுள் இருந்த யானை, வனத்துறையின் ஜீப்பை நோக்கி ஆக்ரோசமாக ஓடி வந்தது.

இதைக் கண்டதும், வனத்துறையினர் ஜீப்பில் இருந்து இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு ஓடினர். யானை தந்தத்தால் ஜீப்பை தூக்கி போட்டதுடன் முன் பக்கத்தை மிதித்து சேதப்படுத்தி, கண்ணாடியை உடைத்தன. வாகனத்தின் அருகே நின்றிருந்த காட்டு யானையை நீண்ட நேரத்துக்கு பின் விலகி சென்றதும், வனத்தினுள் விரட்டினர்.






      Dinamalar
      Follow us