sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வனத்தில் குப்பை கொட்ட தடை ஊராட்சிக்கு வனத்துறை 'நோட்டீஸ்'

/

வனத்தில் குப்பை கொட்ட தடை ஊராட்சிக்கு வனத்துறை 'நோட்டீஸ்'

வனத்தில் குப்பை கொட்ட தடை ஊராட்சிக்கு வனத்துறை 'நோட்டீஸ்'

வனத்தில் குப்பை கொட்ட தடை ஊராட்சிக்கு வனத்துறை 'நோட்டீஸ்'


ADDED : மார் 07, 2024 03:36 AM

Google News

ADDED : மார் 07, 2024 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார், : சேரம்பாடி வனப்பகுதியில் குப்பை கொட்ட தடைவிதித்து, ஊராட்சி நிர்வாகத்துக்கு வனத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

பந்தலுார் சேரம்பாடி வனப்பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்பாக, சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், ஊராட்சி தலைவருக்கு அனுப்பி உள்ள 'நோட்டீசில்' கூறியுள்ளதாவது:

சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட சப்பந்தோடு மற்றும் குழிவயல் பகுதி சேரம்பாடி காவல் பகுதிக்கு உட்பட்டது. வருவாய் துறைக்கு சொந்தமான இந்த வனப்பகுதியில் சேரங்கோடு ஊராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், ஊராட்சி குப்பை லாரியில் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

இதனால், உணவிற்காக வந்து செல்லும் வனவிலங்குகள் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், பொதுமக்கள் இந்த வழியை கடந்து செல்வதால் வனவிலங்குகளால் அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, வனத்தையும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டி உள்ளதால், வனத்துறை ஒட்டி உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் சேரங்கோடு ஊராட்சி மூலம் சேகரிக்கும் குப்பை கழிவுகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும்.

குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது






      Dinamalar
      Follow us