sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரி வரையாடுகளுக்கு நாடாப்புழு தொற்று கண்காணிக்க வனத்துறை நடவடிக்கை

/

நீலகிரி வரையாடுகளுக்கு நாடாப்புழு தொற்று கண்காணிக்க வனத்துறை நடவடிக்கை

நீலகிரி வரையாடுகளுக்கு நாடாப்புழு தொற்று கண்காணிக்க வனத்துறை நடவடிக்கை

நீலகிரி வரையாடுகளுக்கு நாடாப்புழு தொற்று கண்காணிக்க வனத்துறை நடவடிக்கை


ADDED : ஏப் 02, 2025 08:58 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 08:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தின் மாநில விலங்காக, நீலகிரி வரையாடுகள் உள்ளன. அழிந்து வரும் நீலகிரி வரையாடுகளை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டம், 2023 அக்டோபர், 12ல் துவக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், நீலகிரி வரையாடுகள் பாதுகாப்புக்காக, 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிதியில், முதல் பணியாக, தமிழகம், கேரள வனத்துறையினர் கூட்டாக, நீலகிரி வரையாடுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தினர்.

இதில், தமிழகத்தில் 1,031 வரையாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கான வாழ்விட பாதுகாப்புக்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம்; நீலகிரி மாவட்டம் முக்கூர்த்தி தேசிய பூங்கா ஆகிய இடங்களில், தலா ஒரு நீலகிரி வரையாட்டுக்கு, 'ரேடியோ காலர்' கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டது.

இதில், ஒரு வரையாடு இறந்த நிலையில், மற்ற வரையாடுகளுக்கு, 'ரேடியோ காலர்' கருவிகள் பொருத்தும் பணி நிறுத்தப்பட்டது. சமீபத்தில், கள ஆய்வு அடிப்படையில், நீலகிரி வரையாடுகளின், உடல் நிலை ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, நீலகிரி வரையாடுகளின் உடலில், ஒருவித நீர்க்கட்டிகள் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், சில வரையாடுகளுக்கு உடல் நிலை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நீலகிரி வரையாடுகளின் உடலில் காணப்படும் நீர்க்கட்டிகள் குறித்து ஆய்வு செய்ததில், மாமிச நாடாப்புழு தொற்று காரணமாக ஏற்படும், 'கோனுாரஸ்' நீர்க்கட்டிகள் என்பது தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக, தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையுடன், நீலகிரி வரையாடுகளை, தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் அடிப்படையில், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us