ADDED : பிப் 21, 2026 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: மசினகுடி வனக்கோட்டத்தில் வனத்தீ தடுப்பு வார விழாவை முன்னிட்டு, வனத்துறை சார்பில், 16ம் தேதி தேதி தீ தடுப்பு குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
17ம் தேதி ஆனைகட்டி, சிறியூர் கிராமங்களில் வனத்தீயினால் ஏற்படும் பாதிப்பு, தடுப்பு குறித்து மக்களுக்கு விளக்கப்பட்டது; 18ம் தேதி மசினகுடி அரசு பள்ளி மாணவர்களிடையே வனத்தீ தடுப்பு குறித்து கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடந்தது.
நேற்று, மசினகுடியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வன ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

