sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இலவச சேலை தரம் குறைவு; பொதுமக்கள் புகார்

/

இலவச சேலை தரம் குறைவு; பொதுமக்கள் புகார்

இலவச சேலை தரம் குறைவு; பொதுமக்கள் புகார்

இலவச சேலை தரம் குறைவு; பொதுமக்கள் புகார்


ADDED : ஜன 10, 2024 11:50 PM

Google News

ADDED : ஜன 10, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர் : அரசு வழங்கிய இலவச சேலை தரம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அன்னூர் தாலுகாவில் மூன்று பேரூராட்சி, 28 ஊராட்சிகளில், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய், வேட்டி, சேலை, பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு வழங்கும் பணி நேற்று துவங்கியது.

அன்னூர் தாலுகாவில் உள்ள 81 ரேஷன் கடைகளில், 49 ஆயிரத்து 212 பேருக்கு சேலையும், 46 ஆயிரத்து 767 பேருக்கு வேஷ்டியும் வழங்கும் பணி துவங்கியது.

அன்னூர் கூட்டுறவு பண்டக சாலையில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் இலவச வேட்டி சேலை விநியோகத்தை துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

வேட்டி சேலை விநியோகத்தை கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் வழங்கப்பட்ட சேலை தரம் குறைவாக உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

சிலர் கூறுகையில்,' சேலை மிகவும் லேசாக உள்ளது. இதை வீட்டில் தொட்டில் கட்டவோ அல்லது வேறு உபயோகத்துக்கு தான் பயன்படுத்த முடியும்.

வயதானவர்கள் மட்டுமே இந்த சேலையை உடுத்த முடியும். வேட்டியின் தரம் சுமாராக உள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us