sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மூட்டைகளில் குப்பை கழிவுகள் சுகாதார சீர்கேட்டால் அவதி

/

மூட்டைகளில் குப்பை கழிவுகள் சுகாதார சீர்கேட்டால் அவதி

மூட்டைகளில் குப்பை கழிவுகள் சுகாதார சீர்கேட்டால் அவதி

மூட்டைகளில் குப்பை கழிவுகள் சுகாதார சீர்கேட்டால் அவதி


ADDED : அக் 21, 2025 10:26 PM

Google News

ADDED : அக் 21, 2025 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர்: பந்தலூர் பஜார் முழுவதும், குப்பை கழிவுகளை மூட்டைகளாக கட்டி வைத்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

பந்தலூர் பஜார் பகுதியில், தனியார் நிறுவனம் வாயிலாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு, ஏலமன்னா பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக பந்தலூர் பஜாரில், குப்பைகள் சேகரிக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடவில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேகரிக்கப்பட்ட குப்பைகளை, குப்பை லாரிகளில் கொட்டி புதிய பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைத்துள்ளனர். அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

மேலும், பந்தலூர் பஜார் பகுதியில் முழுவதும், குப்பை கழிவுகளை மூட்டைகளில் கட்டி பல இடங்களிலும் வைக்கப்பட்டு இருந்தது. அப்புறப்படுத்தாததால் கடும் துர்நாற்றம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us