sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 கட்டபெட்டு பஜாரில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு

/

 கட்டபெட்டு பஜாரில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு

 கட்டபெட்டு பஜாரில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு

 கட்டபெட்டு பஜாரில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு


ADDED : ஜன 10, 2026 06:56 AM

Google News

ADDED : ஜன 10, 2026 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி- ஊட்டி சாலையில் அமைந்துள்ள கட்டபெட்டு பஜாரில், வங்கிகள், தனியார் கிளினிக்குகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உட்பட, குடியிருப்புகள் நிறைந்துள்ளன. கக்குச்சி, நடுஹட்டி ஊராட்சிகள் மற்றும் ஜெகதளா பேரூராட்சியின் எல்லையாக இப்பகுதி அமைந்துள்ளது. கிராமப்புறங்களில் இருந்து, நகரப்பகுதிக்கு வருவோர், கட்டபெட்டு பஜாரை கடந்து தான் சென்று வர வேண்டும். தவிர, இவ்வழித்தடத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், குடியிருப்புகளை ஒட்டி, சமீபக்காலமாக, குப்பைகள் கொட்டப்பட்டுஅகற்றப்படாமல் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றத்துடன், கொசுத்தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, ஹெத்தையம்மன் திருவிழா நடந்து வரும் நிலையில், பக்தர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, ஜெகதளா பேரூராட்சி நிர்வாகம், தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.






      Dinamalar
      Follow us