sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மான்கள் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற போது அரசு பஸ் விபத்து

/

மான்கள் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற போது அரசு பஸ் விபத்து

மான்கள் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற போது அரசு பஸ் விபத்து

மான்கள் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற போது அரசு பஸ் விபத்து


ADDED : ஆக 01, 2025 07:48 PM

Google News

ADDED : ஆக 01, 2025 07:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; முதுமலை--மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், மான்கள் மீது மோதாமல் தவிர்க்க, முயன்ற போது, அரசு பஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

கூடலுாரில் இருந்து, கர்நாடக மாநிலம் மைசூருக்கு நாள்தோறும் காலை, 7:30 மணிக்கு, தமிழக அரசு பஸ் இயக்கப்படுகிறது. வழக்கம் போல நேற்று காலை இந்த பஸ், 22 பயணிகளுடன், கூடலுாரில் இருந்து புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை வழியாக, மைசூரு நோக்கி சென்றது. பஸ்சை ஓட்டுனர் நவீன் ஓட்டி சென்றார். காலை, 7:45 மணிக்கு, தொரப்பள்ளி வன சோதனை சாவடியை கடந்து, முதுமலை புலிகள் காப்பகம் வழியாக சென்றது.

அப்போது, மான் கூட்டங்கள் திடீரென சாலையை கடந்தது. மானின் மீது பஸ்சை மோதாமல் இருக்க ஓட்டுனர் திடீரென பஸ் திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மரத்தில் மோதி நின்றது. இதில், பஸ் கண்ணாடி சேதமடைந்தது. பஸ் ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

அங்கிருந்து, பயணிகள் உதவியுடன், பஸ் மீட்கப்பட முயன்ற போது, பஸ் சாலையின் குறுக்கே நின்றது. இதனால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, வாகன ஓட்டுனர்கள், பயணிகள் உதவியுடன், சாலை குறுக்கே நிறுத்தப்பட்ட பஸ் நகர்த்தப்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டது. காலை, 10:00 மணிக்கு வாகன போக்குவரத்து சீரானது.






      Dinamalar
      Follow us