sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குண்டம் விழா பூச்சாட்டுடன் துவங்கியது

/

குண்டம் விழா பூச்சாட்டுடன் துவங்கியது

குண்டம் விழா பூச்சாட்டுடன் துவங்கியது

குண்டம் விழா பூச்சாட்டுடன் துவங்கியது


ADDED : மார் 13, 2024 10:19 PM

Google News

ADDED : மார் 13, 2024 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : குண்டத்து காளியாதேவி கோவிலில், பூச்சாட்டுடன் குண்டம் விழா துவங்கியது.

மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில் குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு குண்டம் திருவிழா பூச்சாட்டுதல் நடந்தது.

தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகிய இருவரும் இணைந்து, சிறப்பு பூஜைகள் செய்து, பூக்களையும், பொரியையும் அம்மன் சுவாமி மீதும், குண்டத்தின் மீது போட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜை முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வருகிற, 19ம் தேதி ஆடு குண்டம் திறந்து, அக்னி கம்பம் நடப்பட உள்ளது. 25ம் தேதி அம்மன் அழைப்பும், 26ம் தேதி இரவு குண்டம் திறந்து பூ வளர்க்கப்பட உள்ளது.

அதைத்தொடர்ந்து, 27ம் தேதி காலை, 5:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து, அம்மன் அழைப்பும், 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது. 8:00 மணிக்கு அன்னதானமும், அதைத்தொடர்ந்து அம்மனுக்கும், மகா முனீஸ்வரருக்கும் அக்னி அபிஷேகம் நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டும், மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. 29ம் தேதி இளநீர் அபிஷேக அலங்கார பூஜையும், ஏப்ரல் மாதம்,1ம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us