sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆலங்கட்டி மழை பொழிவு; மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள்

/

ஆலங்கட்டி மழை பொழிவு; மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள்

ஆலங்கட்டி மழை பொழிவு; மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள்

ஆலங்கட்டி மழை பொழிவு; மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள்


ADDED : மே 01, 2025 11:18 PM

Google News

ADDED : மே 01, 2025 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பெய்த ஆலங்கட்டி மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, வெயிலான காலநிலை நிலவியது. இதனால், வெப்ப சலனம் அதிகரித்து காணப்பட்டது. தேயிலை உட்பட, மலை காய்கறி தோட்டங்களில் ஈரப்பதம் குறைந்ததால், பயிர்கள் வாட்டம் கண்டன.

குடிநீர் ஆதாரங்களில், தண்ணீர் இருப்பு குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், நேற்று பிற்பகல், 3:00 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், 3:30 மணி முதல், கோத்தகிரியில் ஆலங்கட்டி மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல், நீடித்த இந்த மழையால், நீர் ஆதாரங்கள் நிறைந்து, விவசாய தோட்டங்களில் ஈர தன்மை அதிகரித்தது. இதேபோல, ஊட்டியிலும் ஒரு மணி நேரம் மழை பெய்தது.

இதனால், எதிர் வரும் நாட்களில், தேயிலை தோட்டங்களில் அரும்பு துளிர்விட்டு மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மலை காய்கறி பயிர்களும் செழித்து வளர, இந்த மழை ஏதுவாக அமைந்துள்ளது. இதனால், விவசாயிகள் உட்பட, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us