/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைப்பு
/
மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : டிச 04, 2024 09:50 PM
பந்தலுார்; பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரகத்தில், வனக்காவலராக பணியாற்றி வருபவர் பிரபு. இவர் அலுவலக பணிக்காக, கூடலுார் பஸ் நிலையத்தில் இருந்து, கோவைக்கு செல்வதற்கு பஸ் ஏறி உள்ளார்.
அப்போது, வேறு ஒரு பணிக்காக பஸ்சிலிருந்து கீழே இறங்கி வந்துள்ளார். அந்த பஸ் சென்று விடவே, தனது மொபைல் போனை பஸ்சில் தவறவிட்டது தெரிய வந்தது.
உடனடியாக பஸ் டெப்போவில் தகவல் தெரிவித்து, சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
கண்டக்டரும் அவர் ஏறி அமர்ந்த இருக்கையின் அடியில் பார்த்தபோது, அங்கு மொபைல் போன் இருந்தது தெரிய வந்துள்ளது. அதனை எடுத்து பத்திரமாக வைத்திருந்துள்ளனர். பின்னர் வனக்காவலர் பிரபு வேறு வாகனத்தில், ஊட்டி சென்று தனது போனை வாங்கி கொண்டு கோவைக்கு பயணித்துள்ளார். போனை பத்திரமாக எடுத்து வழங்கிய பஸ் டிரைவர் முத்து மற்றும் கண்டக்டர் மகேசன் ஆகிய இருவருக்கும் நன்றியும் தெரிவித்தார்.

