/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் பழங்குடி மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு: 33 பேருக்கு சிகிச்சை
/
கூடலுாரில் பழங்குடி மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு: 33 பேருக்கு சிகிச்சை
கூடலுாரில் பழங்குடி மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு: 33 பேருக்கு சிகிச்சை
கூடலுாரில் பழங்குடி மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு: 33 பேருக்கு சிகிச்சை
ADDED : ஜூலை 18, 2025 12:30 AM
கூடலுார்; கூடலுார் சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் படித்து வரும், 33 பழங்குடி மாணவர்களுக்கு, திடீர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அரசு சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 99 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடியினர் மாணவகள். நேற்று, 78 மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.
அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. சிறிது நேரத்தில், பல மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதில், 33 மாணவர்களை சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் மாணவர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
அதில், தலை, வயிற்று வலியால் அதிகம் உள்ள நான்கு மாணவர்கள், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். மாற்றவர்கள் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்நது, கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகர், டி.எஸ்.பி., வசந்தகுமார், தாசில்தார் மாரிமுத்து ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவ குழுவினர் பள்ளிக்கு நேரில் சென்று அனைத்து மாணவர்களுக்கும் உடல் பரிசோதனை மேற்கொண்டனர். அனைவரும் நலமாக இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
ஆர்.டி.ஓ., குணசேகரன் கூறுகையில், ''உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்த, 33 மாணவர்களும் நல்ல நிலையில் உள்ளனர். தலைவலி, வயிற்று வலி ஏற்பட்ட நான்கு மாணவர்கள் மட்டும் உள்நோயாளியாக அனுமதித்து கண்காணித்து வருகின்றனர். மற்றவர்களுக்கு இருமல், சளி ஏற்பட்டிருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். காலை உணவு உட்கொண்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,'' என்றார்.