sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோத்தகிரியில் விரிவுபடுத்தப்பட்ட சாலையில் மண் குவியல்; வாகனங்கள் சென்றுவர சிரமம்

/

கோத்தகிரியில் விரிவுபடுத்தப்பட்ட சாலையில் மண் குவியல்; வாகனங்கள் சென்றுவர சிரமம்

கோத்தகிரியில் விரிவுபடுத்தப்பட்ட சாலையில் மண் குவியல்; வாகனங்கள் சென்றுவர சிரமம்

கோத்தகிரியில் விரிவுபடுத்தப்பட்ட சாலையில் மண் குவியல்; வாகனங்கள் சென்றுவர சிரமம்


ADDED : டிச 17, 2024 09:39 PM

Google News

ADDED : டிச 17, 2024 09:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி - கோடநாடு இடையே, விரிவுபடுத்தப்பட்ட சாலையில், மண் குவியல் அகற்றப்படாமல் உள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

கோத்தகிரி - கோடநாடு சாலை மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, சாலை வளைவுகள், தடுப்பு சுவருடன் விரிவுபடுத்தப்பட்டது. இச்சாலை வழியாக, கோடநாடு, கீழ் கோத்தகிரி, சோலுார்மட்டம், கெங்கரை, தேனாடு, துானேரி மற்றும் இடுக்கரை உட்பட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. தவிர, பள்ளி வாகனங்கள் உட்பட, நுாற்றுக்கணக்கான தனியார் வாகனங்களும் சென்று வருவதால், நாள்தோறும் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில், புதுார் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக, கொட்டப்பட்ட மண் குவியல், நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால், கனரக வாகனங்கள் சென்று வரும்போது ஒதுங்க முடியாத நிலை உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை விரிவுபடுத்தப்பட்ட சாலையில், மண் குவியலை அகற்றி, கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us