/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் பலத்த மழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு
/
நீலகிரியில் பலத்த மழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு
நீலகிரியில் பலத்த மழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு
நீலகிரியில் பலத்த மழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு
UPDATED : ஜூலை 16, 2024 01:55 PM
ADDED : ஜூலை 16, 2024 01:34 PM

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஆங்காங்கே மரங்கள் விழுந்ததாலும், வெள்ளத்தில் தரைபாலம் மூழ்கியதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று( ஜூலை 15) முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கியது.
அணைகளில் நீர்மட்டம் உயர்கிறது
இன்று காலை 8:00 மணி நிலவரப்படி அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கெத்தை, பைக்காரா, போர்த்தி மந்து உள்ளிட்ட அணைகளுக்கு வினாடிக்கு, 250 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மழை பொழிவு இல்லாமல் அணைகள் அதல பாதாளத்திற்கு தண்ணீர் சென்ற நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் மின்வாரிய அதிகாரிகள் ஆறுதல் அடைந்துள்ளன.
வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்
சிரமத்தில் மக்கள்
விடுமுறை
கன மழையை ஒட்டி இன்று நீலகிரியில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.