sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை; மண்சரிவால் மலை ரயில் இன்றும் ரத்து

/

நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை; மண்சரிவால் மலை ரயில் இன்றும் ரத்து

நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை; மண்சரிவால் மலை ரயில் இன்றும் ரத்து

நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை; மண்சரிவால் மலை ரயில் இன்றும் ரத்து


ADDED : அக் 01, 2024 06:20 AM

Google News

ADDED : அக் 01, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுார் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கன மழையால், மலைரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு, மேட்டுப்பாளையம்- குன்னுார் இடையே மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவில் கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி குன்னுாரில், 6.2 செ.மீ., மழையளவு பதிவானது.

இந்நிலையில், குன்னுார் மலை ரயில் பாதையில், ரன்னிமேடு, ஆடர்லி, ஹில்குரோவ் உள்ளிட்ட இடங்களில் கற்களுடன் மண்சரிவு தண்டவாளத்தில் விழுந்தன. மண்; கற்களை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 7:10 மணிக்கு ஊட்டி நோக்கி புறப்பட்ட மலை ரயில் ரத்து செய்யப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் தொகை திருப்பி வழங்கப்பட்டது.

இரவு வரை பணிகள் நிறைவு பெறாததால், இன்றும் (அக்.,1) மேட்டுப்பாளையம் மலை ரயில் ரத்து செயயப்படுகிறது. அதே வேளையில், ஊட்டி- குன்னுார் இடையே இயக்கப்படும் மற்ற ரயில்கள் பாதிப்பின்றி இயக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us