sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மலையில் கொட்டி தீர்த்த கனமழை; அரசு பஸ் மீது விழுந்த பாறை கற்கள்

/

மலையில் கொட்டி தீர்த்த கனமழை; அரசு பஸ் மீது விழுந்த பாறை கற்கள்

மலையில் கொட்டி தீர்த்த கனமழை; அரசு பஸ் மீது விழுந்த பாறை கற்கள்

மலையில் கொட்டி தீர்த்த கனமழை; அரசு பஸ் மீது விழுந்த பாறை கற்கள்


ADDED : அக் 16, 2025 06:51 AM

Google News

ADDED : அக் 16, 2025 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுாரில் மலைப்பாதையில் சென்ற கேரள அரசு பஸ்சின் மீது பாறைகள் விழுந்தன.

நீலகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. அதிகபட்சமாக கோடநாட்டில், 86 மி.மீ., கோத்தகிரியில், 62 மி.மீ, எடப்பள்ளியில், 59 மி.மீ., குன்னுாரில், 47 மி.மீ., மழையளவு பதிவானது.

குன்னுார் மலைப்பாதையில் நள்ளிரவு, 12:30 மணியளவில், சின்ன குரும்பாடி அருகே பாறை கற்கள் விழுந்தன. அப்போது, கோவையில் இருந்து, 48 பயணியருடன் மானந்தவாடி சென்று கொண்டிருந்த, கேரள மாநில அரசு பஸ் முன்புறம், பக்கவாட்டில் பாறைகள் விழுந்தன. அதில், பஸ் சேதமானது. அதிர்ஷ்டவசமாக பயணியர் உயிர் தப்பினர்.

தகவலில், தேசிய நெடுஞ்சாலை துறையினர், வனத்துறையினர் பொக்லைன் உதவியுடன் பாறை கற்களை அகற்றினர். தொடர்ந்து அங்கு வந்த அரசு பஸ்சில், பயணியரை அனுப்பி வைத்தனர்.

இதேபோல, குன்னுார் மலை ரயில் நிலையத்தில், 6.7 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், புதிதாக கட்டப்பட்ட தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. சீரமைப்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us