/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாசிப்பு திறனை மேம்படுத்தும் 'பட்டம்' இதழால் பயன் ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா வித்யாலயா பள்ளி நிகழ்ச்சியில் தகவல்
/
வாசிப்பு திறனை மேம்படுத்தும் 'பட்டம்' இதழால் பயன் ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா வித்யாலயா பள்ளி நிகழ்ச்சியில் தகவல்
வாசிப்பு திறனை மேம்படுத்தும் 'பட்டம்' இதழால் பயன் ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா வித்யாலயா பள்ளி நிகழ்ச்சியில் தகவல்
வாசிப்பு திறனை மேம்படுத்தும் 'பட்டம்' இதழால் பயன் ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா வித்யாலயா பள்ளி நிகழ்ச்சியில் தகவல்
ADDED : டிச 19, 2025 05:22 AM

பந்தலுார்: 'வாசிப்பு திறனை மேம்படுத்தும் 'பட்டம்' இதழால் மாணவர்களுக்கு பெரும் பயன் ஏற்படுகிறது,' என, அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மஹா வித்யாலயா பள்ளியில் நடந்த வினாடி வினா நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவு திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி- வினா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன.
நடப்பாண்டு, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்வி குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன.
இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
பந்தலுார் பள்ளியில் போட்டி இதன் ஒரு பகுதியாக, பந்தலுார் அருகே அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மஹா வித்யாலயா பள்ளியில், வினாடி ---வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 100 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.
மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 8-ம் வகுப்பு மாணவர் பிரியன், 9-ம் வகுப்பு மாணவர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் தேர்வு பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டன.
பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் அன்பரசிதனராஜ், துணை முதல்வர் ரேணுகா, போட்டி பொறுப்பாசிரியர்கள் கிருஷ்ணவேணி, தமிழரசன் ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

