ADDED : செப் 10, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: ஓய்வூதியம் பெறும் பயனாளிகள், தபால் நிலையத்தில் கணக்கு துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலூர் சமூகநலத்துறை தாசில்தார் நந்தகோபால் கூறுகையில் ‘‘முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவி தொகை பெறும் பயனாளிகள், வங்கியில் கணக்கு வைத்திருந்தால், அவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் கணக்கு துவங்க வேண்டும். அதில்,இனி உதவித்தொகை வரவு வைக்கப்படும்,’’ என்றார்,
