/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தற்காலிக ஆசிரியர் பணிக்கு நேர்காணல்
/
தற்காலிக ஆசிரியர் பணிக்கு நேர்காணல்
ADDED : டிச 27, 2024 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; கூடலுார், அரசு கல்லுாரியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான நேர்காணல் ஜன., 8-ல் நடக்கிறது.
கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் (பொ) சுபாஷினி வெளியிட்டுள்ள அறிக்கை:
கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆங்கிலம், வணிகவியல் (கணினி பயன்பாடு), இளங்கலை சமூகப்பணி ஆகிய பாட பிரிவுகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான நேர்முக தேர்வு, ஜன.,8ம் தேதி காலை, 11:30 மணிக்கு கோழிப்பாலம் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. தகுதி உள்ளவர்கள் நேர்முக தேர்வில் பங்கேற்கஅழைக்கப்படுவர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

