sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் சேர அழைப்பு

/

ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் சேர அழைப்பு

ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் சேர அழைப்பு

ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் சேர அழைப்பு


ADDED : ஜூன் 06, 2025 10:00 PM

Google News

ADDED : ஜூன் 06, 2025 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில், கைம் பெண்கள் , ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:

கைம் பெண்கள் ,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் , நலிவுற்ற பெண்கள் , ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோருக்கு, கல்வி , சுகாதாரம் , வேலைவாய்ப்புக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில், சுய உதவி குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சி வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் பாதுகாப்புடன், சிறப்பான முறையில் வாழ்வதற்காக தமிழ்நாடு கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதால் அரசின் பல்வேறு திட்டங்கள் கீழ் பயனடையலாம். இதற்கான முகாம், 9ம் தேதி கோத்தகிரியில் நடக்கிறது. உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயனடைய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us