sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

'இது உன் அப்பன் வீட்டு வண்டியா...?' பெண்ணிடம் தரக்குறைவாக பேசிய டிரைவர்

/

'இது உன் அப்பன் வீட்டு வண்டியா...?' பெண்ணிடம் தரக்குறைவாக பேசிய டிரைவர்

'இது உன் அப்பன் வீட்டு வண்டியா...?' பெண்ணிடம் தரக்குறைவாக பேசிய டிரைவர்

'இது உன் அப்பன் வீட்டு வண்டியா...?' பெண்ணிடம் தரக்குறைவாக பேசிய டிரைவர்


ADDED : ஜன 07, 2024 12:37 AM

Google News

ADDED : ஜன 07, 2024 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:'பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில் பெண்ணிடம் தரக்குறைவாக பேசிய அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலுார் அரசு போக்குவரத்துக் கழக கிளையில், இருந்து பந்தலுார் மற்றும் பாட்டவயல் வழியாக, மாநில எல்லையான அய்யன் கொல்லி பகுதிக்கு, 2- அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதில், ஒரு பஸ்சின் டிரைவராக உள்ளவர் பன்னீர்செல்வம். இவர் நேற்று முன்தினம் மாலை, கூடலுாரில் இருந்து அய்யன்கொல்லி பகுதிக்கு சென்றபோது, ஒரு பஸ் நிறுத்தத்தில், பெண் பயணி ஒருவர் குழந்தையுடன் நின்று கையை நீட்டி நிறுத்துமாறு கூறியுள்ளார்.

ஆனால், டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்று விட்டார். தொடர்ந்து பின்னால் வந்த ஆட்டோவில் ஏறி அய்யன் கொல்லி சென்ற அந்த பெண், பஸ் டிரைவரிடம், 'நான் பஸ்சை நிறுத்துமாறு கூறி கை காட்டினேன் ஏன் நிறுத்தவில்லை,' என, கேட்டுள்ளார்.

அப்போது, பஸ் டிரைவர் பன்னீர்செல்வம், பெண் பயணியிடம், 'கை காட்டினால் பஸ்சை நிறுத்த முடியாது; இது உன் அப்பன் வீட்டு வண்டியா,' என, தரக்குறைவாக பேசி உள்ளார்.

இதனை 'வீடியோ' எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். 'அந்த அரசு பஸ் டிரைவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

கூடலுார் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் அருள் கண்ணன் கூறுகையில், ''டிரைவரின் இந்த ஒழுங்கீனமான செயல் குறித்து, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

பொள்ளாச்சி, ஜன. 7-

ஆனைமலை அருகே கோட்டூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி, கவுன்சிலர்கள், ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேச்சு நடத்திய தாசில்தார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தி.மு.க., கவுன்சிலர் அஜீஸ் கூறியதாவது:

கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த கடந்த, 2015ம் ஆண்டு மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்ட, 3.08 ஏக்கர் நிலத்தில் குறிப்பிட்ட பகுதியை தனியார் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தாசில்தாரிடம் மனு கொடுத்தோம். தாசில்தார் உத்தரவின் பேரில், குப்பை கிடங்குக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்யும் பணியில் நில அளவையர் ஈடுபட்டார். ஆனால், தனியாருக்கு சாதகமாக நில அளவீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

மனு கொடுக்க வந்த போது, அலுவகத்தில் தாசில்தார் இல்லாததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன்பின், தாசில்தார் ரேணுகாதேவி பேச்சு நடத்தி, அளவீடு செய்யப்பட்ட இடத்தை நாளை (8ம் தேதி) நில அளவையர் முன்னிலையில் அளந்து கொடுப்பதாக உறுதியளித்தார். தீர்வு கிடைக்காவிட்டால் முதல்வரை சந்தித்து மனு கொடுப்போம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us