/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புலம் பெயர்ந்த தொழிலாளர் விபரங்களை கட்டாயம் பதிவேற்றணும்: தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுரை
/
புலம் பெயர்ந்த தொழிலாளர் விபரங்களை கட்டாயம் பதிவேற்றணும்: தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுரை
புலம் பெயர்ந்த தொழிலாளர் விபரங்களை கட்டாயம் பதிவேற்றணும்: தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுரை
புலம் பெயர்ந்த தொழிலாளர் விபரங்களை கட்டாயம் பதிவேற்றணும்: தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுரை
ADDED : டிச 15, 2024 11:17 PM
ஊட்டி ; 'தொழிலாளர் நலத்துறை வலை தளத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விபரங்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி, குன்னுார், குந்தா,கோத்தகிரி, கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுக்காக்களில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. தவிர, தனியார் நிறுவனங்களும் உள்ளன. இங்குள்ள பணிகளுக்கு மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து தோட்டங்களில் பணிபுரியும் மாநிலம் விட்டு, மாநிலம் இடம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களின் விபரங்களை சேகரிக்க தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதில், தொழிலாளர் நலத்துறை மூலம் உருவாக்கப்பட்ட 'ஐ.எஸ்.எம்' என்ற வலைதளத்தில் அந்தந்த தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தொழிலாளர்களின் விபரத்தை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் கூறுகையில்,''வலைதளத்தில் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்த தொழிலாளர்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யாமல் பணிபுரிய அனுமதிக்கும் தோட்ட நிறுவனங்களின் மீது சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

