/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் சாலை சீரமைப்பு தரமாக அமைத்தால் நிம்மதி
/
கூடலுாரில் சாலை சீரமைப்பு தரமாக அமைத்தால் நிம்மதி
ADDED : ஜன 16, 2025 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார், ;கூடலுார் நகரில், ஊட்டி- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், பல இடங்கள் சேதமடைந்து வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டது. வியாபாரிகள், பொதுமக்கள் சாலையை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், நெடுஞ்சாலை துறை சார்பில், கூடலுார் நகராட்சி அலுவலகம் முதல் தொரப்பள்ளி வரை, சாலையில் ஏற்பட்ட குழிகளை தற்காலிமாக சீரமைத்துள்ளனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட, சாலை மீண்டும் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே, ஊசிமலை முதல் தொரப்பள்ளி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக தரமாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.