நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுார் அருகே சேரம்பாடி கோரஞ்சால் பகுதியில், உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கபடி போட்டி நேற்று துவங்கியது.
போட்டியை தி.மு.க., மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பரமேஷ்குமார் துவக்கி வைத்தார்.
எம்.பி., ராஜா சார்பில், போட்டிக்கான முதல் பரிசை கிளப் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி, காசிலிங்கம், உட்பட பலர் பங்கேற்றனர்.

