/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கொடியேற்றத்துடன் துவங்கிய காளியம்மன் கோவில் திருவிழா
/
கொடியேற்றத்துடன் துவங்கிய காளியம்மன் கோவில் திருவிழா
கொடியேற்றத்துடன் துவங்கிய காளியம்மன் கோவில் திருவிழா
கொடியேற்றத்துடன் துவங்கிய காளியம்மன் கோவில் திருவிழா
ADDED : மார் 31, 2025 09:42 PM
கோத்தகிரி; கோத்தகிரி அருகே அமைந்துள்ள பேட்லாடா கிராமத்தில் காளியம்மன் மற்றும் மாரியம்மன் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான விழா நேற்று பகல், 1:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவை ஒட்டி நாளை பகல், 1:00 மணிக்கு, ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருவீதி உலா நடக்கிறது. 2ம் தேதி காலை, 9:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை, ஸ்ரீ மாரியம்மன் திருவீதி உலா நடக்கிறது.
தொடர்ந்து, பகல், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணிவரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, ஊர் காரியதரசி ராமகிருஷ்ணன் செவனா கவுடர், ஊர் பிரமுகர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

