/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு டிச., 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு
/
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு டிச., 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு டிச., 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு டிச., 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : நவ 30, 2024 04:51 AM

ஊட்டி : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, டிச., 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
அதேபோல, அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும் ஆஜராகினர். தவிர, சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் மற்றும் போலீசார் நேரில் வருகை புரிந்தனர்.
நீதிபதி முரளிதரன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது. அது குறித்து, அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் கூறுகையில்,''இன்டர்போல் விசாரணை நடந்து வருகிறது. மேலும், புலன் விசாரணை; சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது என நீதிபதியிடம் தெரிவித்தோம். தொடர்ந்து, விசாரணையை, டிச., 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்,'' என்றார்.

