sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கூத்தாண்டவர் கோவில் திருவிழா; தாலிகட்டி கொண்ட திருநங்கைகள்

/

கூத்தாண்டவர் கோவில் திருவிழா; தாலிகட்டி கொண்ட திருநங்கைகள்

கூத்தாண்டவர் கோவில் திருவிழா; தாலிகட்டி கொண்ட திருநங்கைகள்

கூத்தாண்டவர் கோவில் திருவிழா; தாலிகட்டி கொண்ட திருநங்கைகள்


ADDED : ஏப் 06, 2025 09:29 PM

Google News

ADDED : ஏப் 06, 2025 09:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே உப்பட்டி பகுதியில் கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது.

நடப்பாண்டின் திருவிழா கடந்த, 4ம் தேதி வனக்காவலர் பிரபு, பிந்து தலைமையில் குத்து விளக்கு ஏற்றி, திருநங்கை கார்த்திகா தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மறுநாள் நாகக்கன்னி பூஜை, முனி பலி பூஜைகள் நடந்தது.

மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, கூத்தாண்டவர்கள் கண் திறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஆடு, சேவல் பலி பூஜைகள் நடந்தது. அதன்பின், நீலகிரி மாவட்ட திருநங்கைகள் நலசங்க தலைவி நிஷா, வக்கீல் சவுமியா சாஸ், கார்த்திகா, பிங்கி ஆகியோர் சார்பில் திருமண சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. கோவில் பூசாரி ஆசை, திருநங்கைகளுக்கு தாலி கட்டினார்.

தொடர்ந்து, பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறப்பட்டதுடன், தேங்காய் உடைத்து பக்தர்களுக்கு திருநங்கைகள் சார்பில் அருளாசி வழங்கப்பட்டது.

மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், களபலி பூஜை நடத்தப்பட்டு தாலி அறுப்பு நிகழ்ச்சி நடந்தது. கிராம மக்கள் பங்கேற்ற பூஜையுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோவில் பூஜாரி தலைமையில், தலைவர் கணேஷ், செயலாளர் கூத்தையா, பொருளாளர் சண்முகம் உட்பட பலர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us