sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோத்தகிரி கோடநாடு வழக்கு; இருவருக்கு சம்மன்

/

கோத்தகிரி கோடநாடு வழக்கு; இருவருக்கு சம்மன்

கோத்தகிரி கோடநாடு வழக்கு; இருவருக்கு சம்மன்

கோத்தகிரி கோடநாடு வழக்கு; இருவருக்கு சம்மன்


ADDED : நவ 25, 2024 10:27 PM

Google News

ADDED : நவ 25, 2024 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, கோத்தகிரியை சேர்ந்த, இருவருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 2017ல் காவலாளியை கொலை செய்த, 10 பேர் கொண்ட கும்பல், பங்களாவுக்குள் புகுந்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது.

இதில், தொடர்புடைய, 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஊட்டி கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. தற்போது, சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2017ல் சம்பவம் நடந்த நேரத்தில், அ.தி.மு.க.,வை சேர்ந்த வாப்பு என்பவர், பேரூராட்சி தலைவராக இருந்தார். அதேபோல, சோலுார் மட்டம் பிரமுகர் விவேக் என்பவர் அ.தி.மு.க., முக்கிய பொறுப்பில் இருந்தார்.

இவர்கள் இருவரையும், விசாரிக்க எதுவாக கடந்த மாதம் சம்மன் அனுப்பப்பட்டது. இருவரும் ஆஜராகவில்லை. இந்நிலையில், கடைசி வாய்தாவாக, 'இன்று (26ம் தேதி) காலை,10:00 மணிக்கு, கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணை குழு முன் நேரில் ஆஜராக வேண்டும்,' என, போலீசார் சார்பில், மீண்டும் இருவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us