sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 கோடநாடு கொலை வழக்கு: டிச.19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

/

 கோடநாடு கொலை வழக்கு: டிச.19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

 கோடநாடு கொலை வழக்கு: டிச.19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

 கோடநாடு கொலை வழக்கு: டிச.19ம் தேதிக்கு ஒத்திவைப்பு


ADDED : நவ 14, 2025 09:04 PM

Google News

ADDED : நவ 14, 2025 09:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை, டிச., 19ம் தேதிக்கு ஒத்தி வைத்து, நீதிபதி உத்திரவிட்டார்.

கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 2017, ஏப்., 24ல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. அதில், சம்பந்தப்பட்ட சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ்சமி, சதீசன், தீபு, ஜித்தின் ஜாய் உட்பட, 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு, ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

தனிப்படை போலீசார், 316 பேரிடம் மறுவிசாரணை நடத்திய நிலையில், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ.டி., கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் நேரில் ஆஜராயினர். அதேபோல, சி.பி.சி.ஐ.டி., தரப்பில் கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் தலைமையிலான போலீசார் ஆஜராயினர்.

குற்றம் சாட்டப்பட்ட ஜித்தின் ஜாய் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரும் ஆஜராயினர். அரசு தரப்பு வக்கீல்கள் கூடுதல் அவகாசம் கேட்டதால், நீதிபதி முரளிதரன் இவ்வழக்கு விசாரணையை, டிச., 19ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us