/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாரியம்மன் கோவிலில் கிருத்திகை பூஜை
/
மாரியம்மன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED : ஜூன் 23, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: கோத்தகிரி டானிங்டன் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில்
கிருத்திகை பூஜை நேற்று சிறப்பாக நடந்தது. அதிகாலை முதல், அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், அருளுரை நிகழ்த்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோத்தகிரி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.