sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

/

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்


ADDED : ஏப் 21, 2025 08:38 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 08:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி டானிங்டன் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கோத்தகிரி டானிங்டன் பகுதியில், ஆஞ்சநேயருக்கு புதிய கோவில் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் விழா கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று முன்தினம், 19ம் தேதி மாலை, 3:00 மணிக்கு, டானிங்டன் மகாசக்தி விநாயகர் கோவிலில் இருந்து, புண்ணிய தீர்த்தம், முளைப்பாரியுடன், ஆஞ்சநேயருக்கு சீதனம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து, ஸ்ரீ விக்னேஸ்வரர் பூஜை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகளை அடுத்து, தீபாராதனை நடந்தது. இரவு, 9:00 மணிக்கு, யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் நிகழ்ச்சியிடம் பெற்றது. நேற்று முன்தினம் விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் கருடன் வானில் பறந்த நிலையில் காலை, 8:55 மணிக்கு நடந்தது.

மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராசரரியா சுவாமிகள் தலைமையில், திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார், சுதர்சன பட்டாச்சாரியார் ஆகியோர் பங்கேற்று, கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்புஅபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us