sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

விடுமுறை அளிக்காத 33 நிறுவனங்கள் தொழிலாளர் துறை நடவடிக்கை

/

விடுமுறை அளிக்காத 33 நிறுவனங்கள் தொழிலாளர் துறை நடவடிக்கை

விடுமுறை அளிக்காத 33 நிறுவனங்கள் தொழிலாளர் துறை நடவடிக்கை

விடுமுறை அளிக்காத 33 நிறுவனங்கள் தொழிலாளர் துறை நடவடிக்கை


ADDED : ஜன 30, 2024 11:01 PM

Google News

ADDED : ஜன 30, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;'நீலகிரியில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத, 33 நிறுவனங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,' என, தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்காமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் ஆண்டுதோறும் கண்டறியப்பட்டு வருகின்றன.

அந்நிறுவனங்கள் மீது, 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை விடுமுறைகள்) சட்டம், 1957-ம் ஆண்டு உணவு நிறுவனங்கள் சட்டம், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து, குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஷ்குமார் தலைமையில் தொழிலாளர் துறையினர், 'குன்னுார், ஊட்டி, கோத்தகிரி மற்றும் கூடலுார் பகுதிகளில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள்,' என, 60 நிறுவனங்களில் குடியரசு தினத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை முறையாக அளிக்காமல் பணிக்கு அமர்த்திய, 33 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அந்த நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், 'தொழிலாளர்துறை மூலம் இதுபோன்று தொடர் நடவடிக்கைகள் அடிக்கடி நடத்தப்படும்; முரண்பாடுகள் காணப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us