sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரியில் 28 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை

/

நீலகிரியில் 28 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை

நீலகிரியில் 28 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை

நீலகிரியில் 28 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை


ADDED : ஜன 28, 2025 05:15 AM

Google News

ADDED : ஜன 28, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் நீலகிரி மாவட்டத்தில், இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்காமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய, 28 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குடியரசு தினத்தில், இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்காமல், பணியாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நல துறை சார்பில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் தாமரை மணாளன் தலைமையில், நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தினத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தொழிலாளர் உதவி ஆணையர் தாமரை மணாளன் கூறுகையில்,''நீலகிரியில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் பகுதிகளில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என, 55 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ வழங்காத, 28 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது,'' என்றார்.






      Dinamalar
      Follow us