sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த கூலி தொழிலாளி கைது

/

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த கூலி தொழிலாளி கைது

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த கூலி தொழிலாளி கைது

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த கூலி தொழிலாளி கைது


ADDED : ஜூலை 10, 2025 08:24 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 08:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதிக்கு, 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்த, 16 வயது மகள் உள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன், மாணவியை காணவில்லை. பதறிய பெற்றோர், ஊட்டி ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நஞ்சநாடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி, ராஜன், 35, என்பவர் ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி சிறுமியை கடத்தி சென்றது தெரிந்தது. சிறுமிக்கு தாலி கட்டி திருமணம் செய்து நஞ்சநாடு அழைத்து வந்தார்.

போலீசார் ராஜனிடம் விசாரணை நடத்தினர். அதில், ராஜாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக, அவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார் என்பது தெரிந்தது.

தொடர்ந்து, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us