sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க போராடும் கூலித்தொழிலாளி

/

ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க போராடும் கூலித்தொழிலாளி

ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க போராடும் கூலித்தொழிலாளி

ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க போராடும் கூலித்தொழிலாளி


ADDED : ஆக 29, 2025 09:15 PM

Google News

ADDED : ஆக 29, 2025 09:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் ஓவேலி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி, நீக்கப்பட்ட தன் பெயரை, மீண்டும் ரேஷன் கார்டில் சேர்க்க, 10 ஆண்டுகளாக போராடி வருகிறார்.

கூடலார் ஓவேலி, நீயூஹோப் பகுதியில், வசித்து வந்த ராஜேந்திரன், 61. இவர் கடந்த, 2015ல், குடும்பத்துடன், ஓவேலி பாரதி நகருக்கு சென்று வசித்து வருகிறார். இவருக்கு மனைவி வள்ளியம்மா மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர் வீட்டை மாற்றும்போது, பார்வுட் ரேஷன் கடையில் இருந்து, பாரதிநகர் ரேஷன் கடைக்கு கார்டை மாற்றி உள்ளார். அப்போது, ரேஷன் கார்டில் ராஜேந்திரன் பெயரை நீக்கி உள்ளனர். இதனை அறிந்து, தனது பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க கோரி, அதிகாரிகளுக்கு கடந்த, 10 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறார். பெயரை சேர்க்க முடியவில்லை.

ராஜேந்திரன் கூறுகையில், ''எனது மனு குறித்து சென்னை அலுவலகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. பெயர் சேர்ப்பது குறித்து அவர்கள் முடிவு செய்வர் என அதிகாரிகள் கூறுகின்றனர்,'' என்றார்.

அதிகாரிகள் கூறுகையில், 'இவரின் பெயரை ரேஷன் கார்டில் சேர்ப்பது குறித்து, உயர் அதிகாரிகளின் உத்தரவு கிடைத்தவுடன் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us