sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை

/

தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை

தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை

தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை


ADDED : ஆக 17, 2025 09:37 PM

Google News

ADDED : ஆக 17, 2025 09:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் அதிகரட்டி தனி யார் தேயிலை தோட்டத்தில் ஒன்றரை வயதுடைய பெண் சிறுத்தை இறந்தது தொடர்பா க வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

நீலகிரி வனக்கோட்டம், குந்தா வனச்சரகம், அதிகரட்டி பிரிவுக்கு உட்பட்ட கிளிஞ்சாடா கிராமத்தில் தனியார் தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் சிறுத்தை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

நீலகிரி உதவி வனப்பாதுகாவலர் மணிமாறன் மற்றும் நீலகிரி டி.எப்.ஓ., கவுதம் தலைமையில், குந்தா வனச்சரகர் செல்வகுமார், முதுமலை புலிகள் காப்பகம் உதவி வன கால்நடை மருத்துவர் மற்றும் அதிகரட்டி உதவி கால்நடை மருத்துவர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து அதே இடத்தில் நேற்று பிரேத பரிசோதனை செய்தனர்.

வனத்துறையினர் கூறுகையில்,'இறந்த பெண் சிறுத்தைக்கு ஒன்றரை வயதிருக்கும். மருத்துவர்களின் முதற்கட்ட ஆய்வில் வேறு வன விலங்குகளால் ஏற்பட்ட மோதல் காரணமாக இறந்துள்ளது. சேகரிக்கப்பட்ட உடற்கூறாய்வு மாதிரிகள், தடய அறிவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us