sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேயிலை தோட்டத்தில் சிறுத்தை; புதர்களை அகற்றும் பணி தீவிரம்

/

தேயிலை தோட்டத்தில் சிறுத்தை; புதர்களை அகற்றும் பணி தீவிரம்

தேயிலை தோட்டத்தில் சிறுத்தை; புதர்களை அகற்றும் பணி தீவிரம்

தேயிலை தோட்டத்தில் சிறுத்தை; புதர்களை அகற்றும் பணி தீவிரம்


ADDED : ஆக 29, 2025 09:11 PM

Google News

ADDED : ஆக 29, 2025 09:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் கோழிக்கோடு சாலையை ஒட்டிய, பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உலா வந்ததை தொடர்ந்து, சாலையோரத்தில் உள்ள புதர் செடிகளை அகற்றும் பணியில் டான்டீ தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை கோட்டம் (டான்டீ) இரும்புபாலம் முதல், பாண்டியார் குடோன் வரை கோழிக்கோடு சாலையை ஒட்டி உள்ளது.

அதில், இரும்புபாலம் முதல் மரப்பாலம் வரை, சாலையோரம் தேயிலை தோட்டத்தை ஒட்டி, புதர் செடிகள் வளர்ந்துள்ளன.

இங்குள்ள பால்மேடு டான்டீ தேயிலை தோட்டத்தில், சிறுத்தை உலா வந்ததை, கேரளா சுற்றுலா பயணிகள் பார்த்து அதனை 'வீடியோ' எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர். தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.

இதை தொடர்ந்து, இரும்புபாலம் முதல் மரப்பாலம் வரை, டான்டீ தேயிலை தோட்டத்தை ஒட்டி, சாலையோரம் உள்ள செடிகளை அகற்றி சீரமைக்கும் பணியில், டான்டீ தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us